கூட்டணி குறித்து அமித்ஷா கூறியது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. - ஓபிஎஸ் பேட்டி. - தமிழக குரல் - தென்காசி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 8 February 2024

கூட்டணி குறித்து அமித்ஷா கூறியது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. - ஓபிஎஸ் பேட்டி.


தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில்,


அதிமுக கூட்டணி குறித்து அமித்ஷா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு: மத்திய உள்துறை அமைச்சரின் பெருந்தன்மையை இது காட்டுகிறது.


இந்திய கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என மோடி கூறியது குறித்த கேள்விக்கு: அவரவர் கட்சியை உயர்த்தி காண்பிப்பது அந்தந்த தலைவர்களின் பண்பாடு. உறுதியாக பாஜக கூட்டணி இந்தியாவை ஆளுகிற தனி பெரும்பான்மை பெறும்.


எல்.முருகன் மத்திய அமைச்சராக தகுதி இல்லை என டி.ஆர்.பாலு கூறியது குறித்த கேள்விக்கு: அந்த செய்தியை நான் முழுமையாக பார்க்கவில்லை பார்த்த பிறகு கூறுகிறேன்.


உங்களிடம் வராமல் எடப்பாடி இடம் செல்கிறது குறித்த கேள்விக்கு: இப்பவே சண்டையை ஆரம்பித்து வைக்கிறீர்கள். 


உங்கள் பின்பு இருப்பவர்கள் கூலி ஆட்கள் உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று ஜெயகுமார் கூறியது குறித்த கேள்விக்கு: உண்மையான கூலி ஆட்கள் யார் என்பது நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும்.


அமித்ஷா குறிப்பிட்டது உங்கள் அணியையா எடப்பாடி அணியையா என்ற கேள்விக்கு: நாங்கள் தொடர்ந்து என்.டி.ஏ கூட்டணியில் இருந்து கொண்டு தான் இருக்கிறோம். விலகி இருப்பது பழனிச்சாமி  தான்.

 

எத்தனை இடங்களில் போட்டி என்ற கேள்விக்கு: உறுதியாக உங்களிடம் சொல்வேன் என்றார்.

No comments:

Post a Comment